Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வருடங்களாக தபாலே கொடுக்காத தபால்காரர்: 24 ஆயிரம் கடிதங்கள் பறிமுதல்!

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (10:51 IST)
முகவரியை தேடி கடிதம் கொடுக்க சிரமப்பட்டுக்கொண்டு கடிதங்களை பதுக்கி வைத்த தபால்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள கனகவா பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர். 2003 முதல் அந்த பகுதியில் தபால்க்காரராக பணிபுரிந்த அவர் பல முகவரிகளை கண்டுபிடிக்க முடியாததால் கடிதங்களை தன் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். தினமும் தன்னால் கண்டுபிடிக்க முடிந்த முகவரிகளுக்கு மட்டும் கடிதத்தை சேர்ப்பித்துவிட்டு மற்ற கடிதங்களை வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளில் இவ்வாறும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை தன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். இதுகுறித்து அவரை கைது செய்த போலீஸார் விசாரிக்கையில் தனது திறனை சக ஊழியர்கள் கேவலமாக கருதிவிட கூடாது என்பதற்காக அப்படி செய்ததாக கூறியுள்ளார்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 24 ஆயிரம் கடிதங்களையும் மன்னிப்பு நோட்டீஸ் இணைத்து உரிய முகவரிகளுக்கு திரும்ப அனுப்பியுள்ளது ஜப்பான் தபால் துறை.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments