Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்கு சிறை!

Sinoj
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (13:46 IST)
ரஷ்யாவில்  வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் அதிபர் புதின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அதன் ஆதரவு செயல்பாடுகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அந்த நீதிமன்றம் அளித்த உத்தரவில், தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என அறிவித்தது.

தன்பாலின ஈர்ப்பாளர்களை  ஒடுக்கும் நடவடிக்கையில் அந்த நாடு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் நிஸ்னி  நவ்ஹொராட் என்ற பகுதியைச் சேர்ந்த அனஸ்டசியா எர்ஷொவா, பொது இடத்தில் வானவில் நிறத்தில் கம்மல் அணிந்துள்ளார்.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அவருக்கு 5 நாட்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட நிலையில்,மொசினாவுக்கு 1500 ரூபெல் (இந்திய மதிப்பில் ரூ.1357) அபராதம் விதித்து, இவ்வழக்கை முடித்துவைத்து  அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments