Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

Prasanth Karthick
திங்கள், 24 மார்ச் 2025 (13:33 IST)

இங்கிலாந்து கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள மர்மமான உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

உலகம் முழுவதும் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவற்றில் பல மனிதர்கள் காண முடியா அடர் காடுகளுக்கும், ஆழமான கடல் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றன. சில சமயம் அப்படியான உயிரினங்கள் மனிதர்கள் கண்களுக்கு படும்போது பேசுபொருளாகி விடுகின்றன. இங்கிலாந்தில் அப்படியாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 

இங்கிலாந்து கடற்கரையில் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்த ஒருவர் அங்கு மீன் போன்ற உடலும், மனித அமைப்பு போன்ற எலும்புக்கூடு கொண்ட முன்பகுதியையும் கண்டுள்ளார். பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்த அதை அவர் செல்போனில் புகைப்படம் எடுத்து ஷேர் செய்ய அது தற்போது வேகமாக பரவி வருகிறது.

 

கடந்த மாதம் ரஷ்யாவில் மீனவர் ஒருவர் வலையில் இதுபோன்ற விசித்திரமான உயிரினம் சிக்கிய நிலையில் தற்போது அப்படியான சம்பவம் இங்கிலாந்திலும் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments