Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே இரவில் 200 பேர் உயிரிழப்பு: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ராணுவம்..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (18:13 IST)
இஸ்ரேல் ராணுவத்தின் சரமாரியான தாக்குதல் காரணமாக ஒரே இரவில் 200 பேர் இறந்து விட்டதாக  தீவிரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த மாதம் ஆரம்பித்த  இஸ்ரேல்  மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் இன்னும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் பொருள் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில் நேற்று இரவு  இஸ்ரேல் ராணுவத்தின் சரமாரியான தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் பலியாகி விட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கும் இடம், மருத்துவமனை ,ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. 
 
பொதுமக்களோடு பொதுமக்களாக ஹமாஸ் தீவிரவாதிகள் கலந்து இருப்பதாகவும் ஆம்புலன்ஸில் அவர்கள் தப்பித்து வருவதாகவும் அதனால் தான் இந்த தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.  
 
இந்த நிலையில் ஒரே இரவில் 200 பேர் பலியாக உள்ள நிலையில் இதில் பலர் பொதுமக்கள் என்றும் அப்பாவி குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் தீவிரமாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி நாயகா..! பூமி திரும்பிய சுபன்ஷூ சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! கேக் வெட்டி கொண்டாட்டம்!

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments