Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமிக்கு வந்த ஏலியன்கள்? உண்மையை மறைத்த ட்ரம்ப்! – பகீர் கிளப்பும் இஸ்ரேல் விஞ்ஞானி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (10:49 IST)
ஏலியன்கள் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பில் இருப்பதாக இஸ்ரேல் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஏலியன்கள், வேற்றுக்கிரக வாசிகள் குறித்த கற்பனைகளும், விவாதங்களும் காலம் காலமாகவே இருந்து வருகின்றன. இதுகுறித்த படங்கள், கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சதி கோட்பாட்டாளர்கள் ஏலியன்கள் இருப்பதாக பல காலமாகவே பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் ஏலியன்கள் இருப்பது உண்மை என இஸ்ரேல் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு இயக்குனர் ஹெய்ம் எசெட் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களோடு தொடர்பு கொள்ள ”கேலக்டின் பெடரேஷன்” இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் சுரங்கம் அமைத்து இயங்கும் அதில் பல்வேறு ரகசிய விஷயங்கள் நடப்பதாகவும் கூறியுள்ள அவர், இந்த விஷயம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் தெரியும் என குண்டை தூக்கி போட்டுள்ளார்.

ஹெய்ம் எசெட் இவ்வாறு திடீரென ஏலியன் குறித்து பகிரங்கமாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments