பூமிக்கு வந்த ஏலியன்கள்? உண்மையை மறைத்த ட்ரம்ப்! – பகீர் கிளப்பும் இஸ்ரேல் விஞ்ஞானி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (10:49 IST)
ஏலியன்கள் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பில் இருப்பதாக இஸ்ரேல் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஏலியன்கள், வேற்றுக்கிரக வாசிகள் குறித்த கற்பனைகளும், விவாதங்களும் காலம் காலமாகவே இருந்து வருகின்றன. இதுகுறித்த படங்கள், கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சதி கோட்பாட்டாளர்கள் ஏலியன்கள் இருப்பதாக பல காலமாகவே பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் ஏலியன்கள் இருப்பது உண்மை என இஸ்ரேல் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு இயக்குனர் ஹெய்ம் எசெட் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களோடு தொடர்பு கொள்ள ”கேலக்டின் பெடரேஷன்” இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் சுரங்கம் அமைத்து இயங்கும் அதில் பல்வேறு ரகசிய விஷயங்கள் நடப்பதாகவும் கூறியுள்ள அவர், இந்த விஷயம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் தெரியும் என குண்டை தூக்கி போட்டுள்ளார்.

ஹெய்ம் எசெட் இவ்வாறு திடீரென ஏலியன் குறித்து பகிரங்கமாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் விதித்த வரியால் இந்தியாவின் வளர்ச்சியில் சிறு சரிவு! - ஆசிய வளர்ச்சி வங்கி!

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. கனமழைக்கு வாய்ப்பா?

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்! - எங்கே இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்?

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி: மருத்துவர்கள் சொல்வது என்ன?

35 வயது பெண்ணை திருமணம் செய்த 75 வயது முதியவர்.. முதலிரவுக்கு மறுநாள் மர்ம மரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments