Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்ணுக்கு இஸ்ரேல் அடைக்கலம்

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (05:49 IST)
ஈரான் நாட்டை சேர்ந்த நேடா அமீன் என்ற பெண், கடந்த சில வருடங்களாகவே ஈரான் அரசியல் நிலவரங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து தனது பிளாக்கில் எழுதி வந்தார். இவருடைய தைரியமான கருத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. குறிப்பாக ஈரான் பெண்கள் இவருடைய பிளாக்கை தொடர்ந்து படித்து வந்தனர்.


 
 
இந்த நிலையில் நேடா பலமுறை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் எழுதிய புத்தகம் ஒன்றுக்கும் ஈரான் அரசு தடை விதித்தது. இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஈரான் நாட்டை விட்டு வெளியேறி துருக்கியில் அகதியாக வாழ்ந்து வந்தார். துருக்கியில் இருக்கும்போது அவர் புரட்சிகரமாக எழுதுவதை நிறுத்தவில்லை.
 
இந்த நிலையில் ஈரான் நாட்டின் வற்புறுத்தல் காரணமாக துருக்கி அரசு நேடாவை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. இதனால் எங்கு செல்வது என்று திக்கு தெரியாமல் இருந்த நேடாவுக்கு தற்போது அடைக்கலம் கொடுக்க இஸ்ரேல் சம்மதித்துள்ளது. ஈரான், இஸ்ரேலுக்கு பகை நாடாக இருந்தாலும் ஒரு பத்திரிகையாளரின் உயிர் ஆபத்தில் இருப்பதால் மனிதநேய அடிப்படையில் நேடா அமினுக்கு உடனடியாக விசா அளிக்கப்பட்டது’ என இஸ்ரேல் உள்துறை மந்திரி அர்யே டேரி குறிப்பிட்டுள்ளார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments