Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் காஸாவில் பாலஸ்தீனர்கள் 800 பேர் பலி

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் காஸாவில் பாலஸ்தீனர்கள் 800 பேர் பலி
, வெள்ளி, 25 ஜூலை 2014 (18:32 IST)
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.
 
18-வது நாளாக நேற்று காஸாவின் பல்வேறு இடங்களில் ஏவுகணை வீச்சுகளும், குண்டுவீச்சுகளும் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்டன.
 
நேற்றைய தாக்குதலில் மட்டும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் அவசரகால உதவி மையத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப்-அல்-காத்ரா தெரிவித்துள்ளார்.
 
கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 32 இஸ்ரேல் ராணுவத்தினரும், 3 அப்பாவி பொதுமக்களும், தாய் நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
2009 ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீன மண்ணில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் தற்போது நடந்து வரும் தாக்குதல் மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இந்த போரில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil