Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

Prasanth K
செவ்வாய், 24 ஜூன் 2025 (14:25 IST)

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக செய்திகள் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வரும் நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் அப்படி எதுவும் முடிவு செய்யவில்லை என ஈரான் மறுத்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்காவில் போர் நிறுத்த சமரசத்திற்கு உடன்படுவதாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஈரானும் போரை நிறுத்திக் கொள்வதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஈரான் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததுடன், ட்ரம்ப் முன்மொழிந்த சமரத்திற்கு உடன்படுகிறதா என்பது குறித்தும் ஏதும் சொல்லவில்லை.

 

இந்நிலையில் தற்போது இஸ்ரேலில் சில இடங்களில் ஏவுகணை தாக்குதல் சத்தங்கள் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்காக தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகள் மீது சக்தி வாய்ந்த தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போர் நிறுத்தம் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே போர் பதற்றம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments