Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை கொன்ற ஐ.எஸ். தீவிரவாதி: தீவிரவாதத்தை விட சென்னதால் தண்டனை

Webdunia
சனி, 9 ஜனவரி 2016 (17:06 IST)
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இருந்து விலக அறிவுரை சொன்ன தாயை பெற்ற மகனே சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் சிரியாவில் நிகழ்ந்துள்ளது.

சிரியாவில் ராக்காவில் உள்ள பகுதியில் பணியாற்றி வருபவர் லீனா. ராக்கா பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கியமான பகுதி. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிலிருந்து விலகுமாறு தனது மகன் அலி சாக்கருக்கு லீனா அறிவுரை வழங்கியுள்ளார்.
 
தன் தாய் அறிவுரை வழங்கியதை அலி சாக்கர் தனது அமைப்பினரிடம் கூறியுள்ளான். ஐ.எஸ். அமைப்பினர் லீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளனர்.
 
லீனா மத துரோகத்தில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. லீனா பணிபுரியும் பகுதியின் அருகே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் லீனாவின் மகன் அலி சாக்கரே தன் தாயை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளான்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments