Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாயை கொன்ற ஐ.எஸ். தீவிரவாதி: தீவிரவாதத்தை விட சென்னதால் தண்டனை

தாயை கொன்ற ஐ.எஸ். தீவிரவாதி: தீவிரவாதத்தை விட சென்னதால் தண்டனை
, சனி, 9 ஜனவரி 2016 (17:06 IST)
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இருந்து விலக அறிவுரை சொன்ன தாயை பெற்ற மகனே சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் சிரியாவில் நிகழ்ந்துள்ளது.

சிரியாவில் ராக்காவில் உள்ள பகுதியில் பணியாற்றி வருபவர் லீனா. ராக்கா பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கியமான பகுதி. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிலிருந்து விலகுமாறு தனது மகன் அலி சாக்கருக்கு லீனா அறிவுரை வழங்கியுள்ளார்.
 
தன் தாய் அறிவுரை வழங்கியதை அலி சாக்கர் தனது அமைப்பினரிடம் கூறியுள்ளான். ஐ.எஸ். அமைப்பினர் லீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளனர்.
 
லீனா மத துரோகத்தில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. லீனா பணிபுரியும் பகுதியின் அருகே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் லீனாவின் மகன் அலி சாக்கரே தன் தாயை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளான்.

Share this Story:

Follow Webdunia tamil