Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவைத் மசூதியில் ஐ.எஸ் தற்கொலைப்படைத் தாக்குதல்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2015 (17:46 IST)
குவைத்தின் தலைநகரில் உள்ள ஒரு ஷியா மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் இறந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எவ்வளவு பெரிய தாக்குதல் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள இமாம் சாதிக் மசூதியில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதிரியான தாக்குதல்கள் குவைத்தில் மிக அரிதாகவே நடந்திருக்கின்றன. இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்திருக்கிறது. மேலும் எட்டுப் பேர் காயமடைந்திருப்பதாக குவைத்தைச் சேர்ந்த அல் - ஜரிடா நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த மசூதியில் 2000 பேர் கூடியிருந்ததாகவும் திடீரென மாபெரும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் குவைத்தைச் சேர்ந்த ஒரு எம்பி கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments