Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களைத் தாக்குவதற்கு ஐஎஸ்ஐஎஸ் சதித் திட்டம்

இங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களைத் தாக்குவதற்கு ஐஎஸ்ஐஎஸ் சதித் திட்டம்
, திங்கள், 29 டிசம்பர் 2014 (12:22 IST)
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் சதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 

 
இதுகுறித்து பிரபல நாளிதழில் ஒன்று, “உளவுத்துறையினர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இணையதள உரையாடல்களை கவனித்து வருகின்றனர். அது குறித்து தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
 
ராணி குடும்பத்தினரை தாக்குவது கடினம் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அறிந்துள்ளனர். எனவே அவர்கள் ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை அவர்கள் தாக்குதல் இலக்காக கொள்ளக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.
webdunia

 
இந்நிலையில் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை, கிளாரன்ஸ் இல்லம் ஆகியவற்றில் ராணியின் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil