லிபியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு பிரசாரம்: 23 பேருக்கு மரண தண்டனை- நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (17:08 IST)
லிபியாவில் ஐஎஸ் அமைப்புக்கு பிரசாரம் செய்த 23 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லிபியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு அரசிற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர் அரசியலில் ஒரு நிலையற்று, மோதல்  நிலவி வருகிறது. இதனால், உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது, இதை, ஐஎஸ்.ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு திரிபோலி நகரில் கொரிந்தியா ஓட்டலில்  ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில், 9 பேர் பலியாகினர். இதனைத்தொடர்ந்து எகிப்திய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை நாடு கடத்தி, கொன்றனர்.

இப்படுகொலை தொடர்பாக லிபியாவின் மிஸ்ரதா நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை  நடைபெற்றது. இதில், 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, மேலும் ஒரு நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும்,  6 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments