Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அமெரிக்க டாலர்களை பயன்படுத்த மாட்டோம்’ – ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2017 (18:55 IST)
ஈரான் நாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்ததை அடுத்து, இனி அமெரிக்க டாலர்களை பயன்படுத்த மாட்டோம் என கூறி ஈரான் நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.


 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரான், ஈராக் உள்பட 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைகளில் இனி மேல் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட மாட்டாது. இதற்கு மாற்றாக வேறு பொதுவான வெளிநாட்டு நாணயம் பயன்படுத்தப்படும்.

ஈரான் நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 21 ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments