Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் ஈரான் கப்பல்! – தாக்கியது யார்?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:15 IST)
ஏமன் நாட்டில் செங்கடல் பகுதியில் கடந்த நான்கு ஆண்டாக நிறுத்தப்பட்டிருக்கும் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் நாட்டின் அருகே செங்கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான எம்.வி.சாவிஸ் சரக்கு கப்பல் கடந்த நான்கு ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையாக இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்தாலும், சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகள் ஈரானின் இந்த கப்பல் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கடலில் நின்றிருந்த எம்.வி.சாவிஸ் மீது அநாமதேய தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பங்கு இருப்பதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் கப்பல் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments