Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசா மீதான தாக்குதலை தடுக்க இந்தியா முயற்சிக்க வேண்டும்: ஈரான் அதிபர் வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:37 IST)
காசா மீது இஸ்ரேல் அதிரடியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலை தடுக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் குறிப்பாக மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான் அதிபர் ரைசி அவர்கள் இது குறித்து கூறிய போது காசா மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக தாக்குதலை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  

பிரதமர் மோடியுடன் அவர் தொலைபேசியில் பேசிய பின்னர் ’இஸ்ரேல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தனது அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவால் அது நிச்சயம் முடியும் என்றும் கூறியுள்ளார்.  

ஈரானின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி காசா தாக்குதலை நிறுத்த முயற்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments