Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (17:25 IST)
இந்தியா, சீனா போன்ற நாடுகளை ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

 
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 
 
அந்த வகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. 
 
அமெரிக்காவின் முடிவு அவ்வளவு எளிதாக எங்களை சர்வதேச எண்ணெய் சந்தையிலிருந்து விலக்கி வைக்க முடியாது. ஒருநாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய் உலக நாடுகளுக்கு ஈரான் ஏற்றுமதி செய்து வருகிறது. எங்களை சந்தையிலிருந்து சில மாதங்களில் நீக்கிவிடலாம் என்று நினைப்பது சாத்தியமற்றது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments