Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானை தாக்க உரிமை உள்ளது; பகீர் கிளப்பும் நேதன்யாகு! - ஈரான் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Prasanth Karthick
திங்கள், 7 அக்டோபர் 2024 (09:39 IST)

இஸ்ரேல் மீது ஈரான் ராக்கெட் மழை பொழிந்த நிலையில் ஈரானை திரும்ப தாக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக அதன் பிரதமர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இஸ்ரேல் - ஹெஸ்புல்லா அமைப்பு இடையே போர் மூண்டுள்ள நிலையில், லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பின் பதுங்கு தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹெஸ்புல்லாவின் தலைவர், தளபதிகள் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் ஹெஸ்புல்லாவிற்கு ஆயுத உதவி செய்து வந்த ஈரான் நேரடியாக இஸ்ரேலுக்கு எதிரான போரில் இறங்கியது. கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியது. அதில் பல ஏவுகணைகளை, தடுப்பு அமைப்பின் மூலம் இஸ்ரேல் வீழ்த்தியது. எனினும் தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.
 

ALSO READ: காதலை ஏற்க மறுத்த குடும்பம்; 13 பேரையும் விஷம் வைத்து கொன்ற பெண்! - சிக்கியது எப்படி?
 

இந்நிலையில் சமீபத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்துவதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளதாக பேசியுள்ளார். எந்த நேரத்திலும் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தலாம் என்ற பதற்றம் உள்ளது.

 

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானில் இரவு நேரங்களில் விமான சேவைகள் தடை செய்யப்பட்டு, விமான பாதைகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலுடன் ஹமாஸ், ஹெஸ்புல்லா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் போர் நடத்தி வரும் நிலையில், ஈரானுடனும் போர் எழுந்துள்ளது மத்திய தரைக்கடலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன ரோடு ஷோ நடத்துறீங்க! உதயநிதிக்கு நடக்கப்போகும் ரோடு ஷோவை பாருங்க! - ராஜ் கவுண்டர் சூளுரை!

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறதா? மாணவர்கள் அதிர்ச்சி..!

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு..! திமுகவில் இணைகிறாரா?

மகனே திரும்பி வா..! கதறி அழுத அரசர்! சவுதி அரேபியாவின் ‘Sleeping Prince’ காலமானார்!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடைஞ்சலாக இருந்த கணவன்! - மனைவி செய்த கொடூரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments