Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு: ஈரானில் 5 அப்பாவி பொதுமக்கள் பலி!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (07:36 IST)
ஈரானில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிவதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக 5 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஈரான் நாட்டின் நகரமான இசே என்ற நகரில் நேற்று ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில்  5 பேர் கொல்லப்பட்டதாகவும் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்பட 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஹிஜாபுக்கு எதிரான போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அரசுக்கு தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
துப்பாக்கி சூடு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியதாகவும் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments