Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரானில் பொது இடத்தில் சாப்பிட்ட 5 பேருக்கு சவுக்கடி

ஈரானில் பொது இடத்தில் சாப்பிட்ட 5 பேருக்கு சவுக்கடி
, புதன், 30 ஜூலை 2014 (16:11 IST)
ஈரானில் ரமலான் மாதத்தில் பொது இடத்தில் சாப்பிட்ட 5 பேருக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
 
ரமலான் மாதத்தில் பொது இடத்தில் சாப்பிட்ட 5 பேருக்கு ஈரானில் சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், ஈரானின் மேற்கு நகரமான கேர்மான்ஷாவில் காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி பொது இடத்தில உணவருந்திய  5 பேருக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும், பொதுவாக ரமலான் மாதத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருந்தாலும் மக்கள் பொது இடங்களில் சாப்பிடவும், தண்ணீர் அருந்தவும் மாட்டார்கள். ஆனால், தண்டனை அளிக்கப்பட்ட ஐந்து பேரும் காவல் துறையினரின் அறிவுரையை புறக்கணித்து இச்செயலில் ஈடுப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil