பேஸ்புக்கை தொடர்ந்து இன்ஸ்டாகிராமுக்கும் ரஷ்யா தடை!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (09:26 IST)
ரஷ்யாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்ட்டாகிராமுக்கு தடை விதித்துள்ளது.

 
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வசமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. போர் குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருவதை தவிர்க்கும் வகையில் ரஷ்யாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டது. 
 
இந்நிலையில் ரஷ்யாவில் இன்ஸ்ட்டாகிராமுக்கு தடை விதித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா குழுமத்திற்கு எதிராக குற்ற நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளது.
 
ரஷ்யா மீதான வெறுப்பு கருத்துகளை அனுமதிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் விதிகளை தளர்த்தியதால் ரஷ்யா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments