Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ; வெளியேற்றப்பட்ட கிராமம்! – இந்தோனேஷியாவில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (10:39 IST)
இந்தோனேசியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விண்ணை முட்டும் அளவு தீ பிழம்பு எழுந்த நிலையில், அதன் உஷ்ணம் அருகிலுள்ள கிராமங்கள் வரை உணரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தீ அதிகரித்து வருவதால் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை இந்த தீ விபத்தால் ஆலை ஊழியர்கள் 9 பேர் படுகாயமுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments