Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (08:27 IST)
இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே நேற்று அதிகாலை லம்பாக் என்ற தீவின் கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
 
நிலநடுக்கம் காரணமாக  ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் பயத்தில் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். 
 
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 150க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments