Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க வாழ் இந்தியருக்கு 2 1/2 ஆண்டு சிறை தண்டனை: நியூயார்க் நீதிமன்றம்

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (11:15 IST)
அமெரிக்க வாழ் இந்தியரான பிரியன் ராமநாராயணன் என்பவர் போலி வெண்கலச் சிற்பங்களை விற்பனை செய்ததற்காக 2 1/2 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
 
பிரியன் ராமநாராயணன் என்பவர் வெண்கல சிற்பக் கலைஞராவார். இவர் பிரபல சிற்பக் கலைஞர்களான ராபர்ட் இன்டியானா, செயின்ட் கிளேர் ஆகியோருடன் சேர்ந்து தயாரித்ததாக கூறி ஏராளமான வெண்கலச் சிற்பங்களை விற்பனை செய்துள்ளார். 
 
சிற்பங்களை வாங்கியவர்கள், அவற்றில் பிரபல சிற்பக்கலைஞர்களின் பங்களிப்பு ஏதும் இல்லை என்பதை அறிந்தனர். இதைத்தொடர்ந்து, ராம நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இவ்வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் ராமநாராயணனுக்கு 2 1/2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதில் போலி சிற்பங்களை வாங்கியவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.43 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments