Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் சிறையிலிருந்த 87 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான் சிறையிலிருந்த 87 இந்திய மீனவர்கள் விடுதலை
, திங்கள், 7 மார்ச் 2016 (23:59 IST)
சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 87 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


 

 
பாகிஸ்தான் எல்லைக்குள் வழி தெரியாமல், தவறாக செல்பவர்கள் மற்றும் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்வது வாடிக்கையான் ஒன்று. அவ்வாறு கைது செய்யப்படும் அவர்கள், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள்.
 
அந்த வகையில், பாகிஸ்தான் லாந்தி சிறையில் வாடிவரும் 87 இந்தியர்களை பாகிஸ்தான் நேற்று விடுவித்தது. அவர்களது ஆவணங்களை சரி பார்த்த பின்னர் இன்று வாகா எல்லையில், அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil