Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பெண் என்ஜினீயர் பிரபா அருண் குமார் கொலை: ரகசிய விசாரணையில் ஆஸ்திரேலிய காவல்துறை

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2015 (00:20 IST)
ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் என்ஜினீயர் பிரபா அருண் குமார் கொலை வழக்கில் புதிய தகவலை ஆஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ளது.
 

 
ஆஸ்திரேலியாவின், சிட்னி அருகே பாராமட்டா பூங்கா உள்ளது. இங்கு, கடந்த மார்ச் மாதம், பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பிரபா அருண் குமார் என்ற பெண், மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க, ஆஸ்திரேலிய காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இக்குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில், பிரபா அருண் குமார் கொலை செய்யப்பட சில நிமிடங்கள் முன்பு, சிசிடிவிவில் பிரபா குமார் ஒருவருடன் பேசும் காட்சியை ஆஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த நபர் முகம் அடையாளம் காண முடியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும், அப்குதியைச் சுற்றிலும் இருந்த கேமராக்களின் பதிவான காட்சிகளை சேகரித்து ரகிசாய விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் ஆஸ்திரேலிய காவல்துறை விசாரணைக்காக, இந்தியா வரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  
 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments