Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரின் பிணத்துடன் உயிர் வாழ்ந்த மனைவி

கணவரின் பிணத்துடன் உயிர் வாழ்ந்த மனைவி
, சனி, 5 செப்டம்பர் 2015 (18:04 IST)
நியூசிலாந்தில் கணவன் இறந்த பிறகும் உடலை அடக்கம் செய்யாமல் அவரின் மனைவி வீட்டிலே வைத்து பாதுகாத்து வந்தது தெரியவந்துள்ளது.

நியூசிலாந்தில் வசித்த வந்த இந்தியர் டேபி பிரசாத் மஜும்தார்(55). இவர் சில வாரங்களுக்கு முன்பு உடல் நலைக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். ஆனால் இவரது மனைவி இது பற்றி யாருக்கும் தெரிவிக்காமல், அவரது பிணத்தை வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்திருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல, பிணம் அழுகி துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அண்டை வீட்டுக்காரர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  

ஆனால், போலிசாரிடம் தன் கணவனின் பிணத்தை தர மறுத்த அந்தப் பெண், தன் கணவன் இறக்கவில்லை என்றும், அவர் தன்னுடன் வாழ்ந்து வருவதாகவும் அழுது புலம்பியிருக்கிறார். அவரை சமாதனம் செய்த போலிசார் பிணத்தை அப்புறப்படுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil