Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதியவர்களை ஏமாற்றி பல கோடி முறைகேடு.. அமெரிக்காவில் இந்தியருக்கு 51 மாதம் சிறை தண்டனை..!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (11:02 IST)
அமெரிக்காவில் முதியவர்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு 51 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பதும் பலர் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் சிலர் சொந்த தொழில் செய்து வருகின்றனர் என்பதன் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர் கௌரவமான முறையில் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு சிலர் கரும்புள்ளியாக முறைகேடு செய்து நாட்டிற்க்கே கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் தெற்கு கரோலினா என்ற மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீல் பட்டேல் என்பவர் இந்தியாவில் செயல்பட்டு வரும் கால் சென்டர் மூலம் அமெரிக்காவில் உள்ள முதியவர்கள் பலரை ஏமாற்றி பல கோடி முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. 
 
இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜீல் பட்டேல் அமெரிக்க போலீஸ் சாரார் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணையை நடந்து வந்தது.
 
இந்த நிலையில் தெற்கு கரோலினா கோர்ட் ஜீல் பட்டேலுக்கு 51 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments