Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ-மெயிலில் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை

இ-மெயிலில் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை
, வெள்ளி, 13 ஜூன் 2014 (15:10 IST)
அமெரிக்காவில் பெண்ணுக்கு இ-மெயிலில் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதுடைய கார்த்திகேயன் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணுக்கு அவரை கற்பழிக்கப்போவதாக மிரட்டி இ-மெயில் அனுப்பினார்.
 
இதுகுறித்து அந்த பெண் காவல்துறையினர்டம் புகார் செய்தார். இதையடுத்து கார்த்திகேயன் நடராஜன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, ’பெண்ணை கற்பழிக்கப்போவதாக மிரட்டல் விடுத்த கார்த்திகேயன் நடராஜனுக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil