Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிலிருந்து மேலும் 112 பேர் வருகை: புறப்பட்டது விமானம்!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (09:07 IST)
சீனாவில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 112 பேரை அழைத்துக் கொண்டு புறப்பட்டது இந்திய விமானம்

சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்தியா விமானங்களை அனுப்பி அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. கடந்த மாதம் பல இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் சிலரை மீட்பதற்காக இந்திய விமானம் சீனா சென்றது.

சீனாவுக்கு தேவையான முக கவசங்கள், மருந்து பொருட்களை 40 டன் அளவில் எடுத்து சென்ற விமானம் அதை சீன அரசிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கு சிக்கியிருந்த 76 இந்தியர்கள் உட்பட 112 பேரை அழைத்துக்கொண்டு இந்தியா புறப்பட்டுள்ளது.

இந்தியா வரும் அவர்கள் 14 நாட்கள் மருத்துவ முகாமில் கண்காணிக்கப்பட்டு பிறகு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments