எல்லை தாண்ட முயன்று பனியில் உறைந்த இந்தியர்கள்! – அமெரிக்காவில் சோகம்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:00 IST)
அமெரிக்கா – கனடா எல்லைப்பகுதியில் இந்திய குடும்பம் ஒன்று பனியில் உறைந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா – கனடா எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்கள் முன்னதாக இந்தியாவை சேர்ந்த ஒரு ஆண், பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் பனியில் உறைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த அந்த நபர்கள் யார் என்பதை கண்டறிய இந்திய, அமெரிக்க தூதரகங்கள் தீவிர விசாரணையில் இறங்கின.

இந்நிலையில் இறந்த அந்த குடும்பத்தினர் குஜராத்தை சேர்ந்த ஜெகதீஷ் பால்தேவ்பாய் பாட்டீல் என தெரிய வந்துள்ளது. கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜெகதீஷ் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது பனியில் உறைந்து அவரது குடும்பமே இறந்துள்ளது. அவர்களை அமெரிக்காவில் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்டீவ் சாண்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? - அன்புமணி கேள்வி!

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments