Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா தேர்தலில் இந்தியா வெற்றி: மண்ணை கவ்விய சீனா!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (07:39 IST)
ஐ.நா தேர்தலில் இந்தியா வெற்றி: மண்ணை கவ்விய சீனா!
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் அமைப்பின் உறுப்பினர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் சீனாவை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் ECOSOC என்ற பெண்களின் மேம்பாட்டுக்கான அமைப்பு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது இந்த அமைப்பின் உறுப்பினர் பதவிக்கு நேற்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த பதவிக்கு இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவை போட்டியிட்டன. 
 
வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் 54 இடங்களைப் பெற்று உறுப்பினர்களாகிய நிலையில்  சீனா தோல்வியைத் தழுவியது.  இந்த தகவலை ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கெளரம்மிக்க ECOSOC உறுப்பினர் பதவியை இந்தியா வென்றுள்ளதாகவும், இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
 
சென்னையைச் சேர்ந்த தமிழரான திருமூர்த்தியின் தொடர் முயற்சிகளால் ஐ.நா.வில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments