Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

Mahendran
வியாழன், 8 மே 2025 (13:07 IST)
சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய ஏவுகணை மூலம் இந்தியாவை தாக்க முயற்சித்ததாகவும், ஆனால் அந்த ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து இந்தியா அழித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானை தாக்கியது என்பதும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது என்றும் தெரிகிறது.
 
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடந்த இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
இந்த நிலையில், இந்திய தாக்குதலுக்கு பதிலாக சீனாவிடம் இருந்து வாங்கிய  சில ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியதாகவும், சீனாவில் இருந்து வாங்கப்பட்ட இந்த ஏவுகணைகளை இந்தியா இடையிலேயே வழிமறித்து அழித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனால் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளால் இந்தியாவுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments