Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் வாக்கெடுப்பு: புறக்கணித்த இந்தியா!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (08:44 IST)
உக்ரைன் மீது போர் தொடர்ந்தது தொடர்பாக ரஷ்யா மீது ஐ.நா சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அதை அதிகாரப்பூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்துள்ளது.

ALSO READ: 62.83 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா சபையில் நடந்தது.

இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. தீர்மானத்திற்கு எதிராக ரஷ்ய ஆதரவு நாடுகள் 5 வாக்களித்தன. ஆனால் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன. இந்தியா நடுநிலைமையை நாடுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments