Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை அழுததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (16:30 IST)
குழந்தை அழுததால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இந்திய குடும்பம் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த 23ஆம் தேதி லண்டனில் இருந்து பெர்லின் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இந்திய குடும்பத்தினர் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட தொடங்கியதும் 3 வயது குழந்தை அழ ஆரம்பித்துள்ளது.
 
பெற்றோர் குழந்தையின் அழுகையை சமாளிக்க முயன்றுள்ளனர். ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்துள்ளது. விமான ஊழியர்கள் குழந்தை அழுகையை நிறுத்த குழந்தையை மிரட்டியுள்ளனர்.
 
இதனால் விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. ஆங்கு குழந்தையும் அதனின் பெற்றோர்களும் கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுதொடர்பாக குழந்தையின் தந்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இதுபற்றி விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
 
இதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். பாதிக்கப்பட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டோம் என்று விளக்கம் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் சொல்வது ஏற்புடையது அல்ல.. கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் கண்டனம்..!

ஓடும் காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. மிஸ் யுனிவர்ஸ் அழகி பரிதாப பலி..!

எம்.எல்.ஏ வீட்டின் முன் திடீரென போராட்டம் நடத்திய ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments