Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது - அமெரிக்கா

Webdunia
சனி, 31 ஜனவரி 2015 (12:14 IST)
இந்தியாவில் புதிய அரசு பதவியேற்ற பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜோ பிட்டாஸ் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அமெரிக்க செனட் சபையில் பேசிய ஜோ பிட்டாஸ், "மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மிகுந்த இந்தியா, தற்போது வெறுப்பு, பெரும்பான்மைத்துவம் மற்றும், சகிப்புத்தன்மை இல்லாததாக மாறியிருக்கிறது.
 

 
புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்து தேசியவாதிகள் அதிகரித்து இருப்பதாக என்.ஜி.ஓக்களின் ஆவணங்களின் தகவல்கள் கூறுகின்றன" என்று தெரிவித்தார். 
 
மேலும், ஒரு சில ஆவணங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர், ”நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 38க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளது. குறிப்பாக டிசம்பரில் மட்டும், கிறிஸ்தவ ஆலயங்களை எரித்தல், கடுமையாக தாக்குதல், அச்சுறுத்தல், மற்றும் போதகர்களை கைது செய்தல் போன்ற 31 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
 
இது போன்ற நடவடிக்கைகளால் இந்திய சமூகத்தினரிடையே  ஒருவித அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால், தொடர்ந்து சிறுபான்மை சமூகத்தினரின் புறக்கணிக்கபட்டு வருகிறார்கள். இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக பேச வேண்டும். அதேபோல் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக ஒபாமா நிர்வாகமும் இந்தியாவிடம் கண்டிப்புடன் பேச வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments