Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாணவிகளின் தலையை மொட்டையடித்த ஆசிரியர்: மன்னிப்பு கோரிய பள்ளி நிர்வாகம்..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (15:02 IST)
இந்தோனேசியாவில் 14 மாணவிகளின் தலையை மொட்டை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தோனேசியா நாட்டில் பெண்கள் பள்ளி ஒன்றில் ஹிஜாபை சரியாக அணியவில்லை என்று கூறி 14 மாணவிகளின் தலையை பள்ளி ஆசிரியர் மொட்டை அடித்ததாக தெரிகிறது. 
 
இந்த சம்பவம் மாணவிகளின் பெற்றோர் தரப்பில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி நிர்வாகி இடம்   ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
மேலும் மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹிஜாபை சரியாக அணியவில்லை என்பதால் 14 மாணவிகளின் தலையை மொட்டை அடித்த  விவகாரம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments