Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

Mahendran
வெள்ளி, 23 மே 2025 (12:11 IST)
சிறையில் இருக்கிற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது நாட்டில் காட்டுத்தனமான சட்டம் நிலவுகிறது என விமர்சித்து, நான் பாகிஸ்தானை காப்பாற்ற தயார், இதுகுறித்து ராணுவம் என்னிடம் நேரடியாக பேசலாம் என தெரிவித்தார்.
 
இந்தியா உடன் சமீபத்திய சண்டையில் இடம்பெற்ற பங்களிப்புக்காக, ஜெனரல் முனீர், பாகிஸ்தான் வரலாற்றில் இரண்டாவது ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
 
"மாஷா அல்லாஹ், அவர் ஃபீல்ட் மார்ஷலாக உயர்ந்திருக்கிறார். ஆனால், இப்போ நாட்டில் காட்டுத்தனமான சட்டம் தான் நடக்கிறது, அங்க ஒரே ஒரு மன்னர்தான் இருக்கிறார்," என X-இல் இம்ரான்கான் பதிவு செய்துள்ளார்.
 
ஆகஸ்ட் 2023 முதல் பல வழக்குகளில் சிறையில் உள்ள கான், தன்னுடன் ஒப்பந்தம் நடந்துவிட்டதாக பரவும் பேச்சுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறினார். "எந்த உரையாடலும் நடக்கவில்லை. நாட்டைச் சரிவிலிருந்து காப்பாற்ற விரும்பினால், ராணுவம் என்னிடம் நேரடியாக பேசலாம்" என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
"பாகிஸ்தான் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்திக்கிறது. நான் ஒருபோதும் எனக்கென எதையும் கேட்கவில்லை," என்றார்.
 
இந்தியா மீண்டும் தாக்கலாம் என எச்சரித்த அவர், ஷெபாஸ் சரீப் அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
 
"பாகிஸ்தானில் தற்போது  பெரிய திருடர்கள் தான் பெரிய பதவியில் இருக்கிறார்கள். ஜனநாயகமே அழிக்கப்படுகிறது. நீதியும், சட்டமும் மாறிக்கொண்டு இருக்கின்றன," என தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments