Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் வெற்றி: உச்சத்திற்கு சென்ற ஜப்பான், ஆஸ்திரேலியா பங்குச்சந்தை..!

Mahendran
புதன், 6 நவம்பர் 2024 (15:07 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தியை அடுத்து, இந்திய பங்குச் சந்தை உயர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா பங்குச் சந்தைகளும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு வெற்றி பெற்றார் என்ற தகவல் வந்த பிறகு, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் குமாரில் 900 புள்ளிகளும் உயர்ந்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல், ஜப்பான் பங்குச்சந்தை இன்று 263 புள்ளிகள் உயர்ந்து, 38,003 என்ற புள்ளிகளில் வணிகமாகிறது. மேலும், ஆஸ்திரேலியாவின் ASX சந்தை 67 புள்ளிகள் உயர்ந்தது என்றும், தென்கொரியா பங்குச் சந்தை உயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ட்ரம்ப் வெற்றி பெற்றதால் உலகளவில் ஸ்திரத்தன்மை உருவாகும், மேலும் எந்த இரண்டு நாடுகளுக்கிடையில் போர் ஏற்பட்டாலும் அதை தடுத்து நிறுத்தும் வல்லமை படைத்தவர் அவர் என்பதால், அவரது வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments