ஜோ பைடன் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டேன்: எலான் மஸ்க்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:38 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிக்க மாட்டேன் என எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு ஜோ பைடன்  போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மீண்டும் ஜனாதிபதியாக தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று எலான் மஸ்க் பேட்டி ஒன்று கூறியுள்ளார்.  

வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான மாநாட்டிற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறிய அவர், தான் அவமதிக்கப்பட்டதால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் என்றும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.  

2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களித்த எலான் மஸ்க் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

டெல்லி குண்டுவெடிப்பை பயமுறுத்தி மோசடி.. போலீஸ் போல் நடித்து மிரட்டல்...!

காருக்குள் சிக்கிய ஒட்டகம்.. 2 மணி நேரம் போராடி ஜேசிபி உதவியுடன் மீட்பு..!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments