ஆப்கானிஸ்தானில் மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகப்பட்டு, கணவன் கட்டையை வைத்து தாக்கி 6 மாத கருவை கலைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அஸ்காமிஸ்க் மாவட்டத்தில் அப்துல் கலீல் அசீர்(20) என்பவர் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். வேறொரு ஆணுடன் தன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு கொடுமை செய்துள்ளார்.
அப்துல் கலீலின் தாய் மற்று சகோதரி அவரது மனைவியை கயிற்றால் கட்டி வைத்து அடித்துள்ளனர். அப்போது அவர் கட்டையால் தாக்கியதில் 6 மாத கரு கலைந்துள்ளது. தற்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வெறிச்செயலுக்கு மகளிர் விவகார துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அப்துல் தப்பியோடியதால், மற்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.