மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

Mahendran
புதன், 29 அக்டோபர் 2025 (10:11 IST)
மத்திய அமெரிக்க கடற்பகுதியில் உருவான வரலாற்றில் வலிமையான 'மெலிஸா' புயல், மூன்றாம் நிலை தீவிரத்துடன் ஜமைக்காவின் வடக்கு கடற்கரையை தாக்கியது. இதனால் தென்மேற்கு ஜமைக்காவில் வீடுகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.
 
மெலிஸா புயலின் தாக்கத்தால் ஜமைக்காவில் 3 பேர், ஹைதியில் 3 பேர், டொமினிக் குடியரசுவில் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பேரழிவு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜமைக்கா பிரதமர் எச்சரித்துள்ளார். மேலும், நிலச்சரிவு மற்றும் கனமழை அபாயமும் உள்ளது.
 
தற்போது 201 கி.மீ. வேகத்தில் நகரும் இந்தப் புயல், இன்று நள்ளிரவில் 3 அல்லது 4ஆம் நிலைத் தீவிரத்துடன் கியூபாவை நோக்கி செல்லவுள்ளது. கியூபாவின் தென்கிழக்கு கடற்கரையில் 8 முதல் 12 அடி உயரத்திற்குக் கடல் அலைகள் எழும் என்றும், இது வெள்ள பாதிப்பை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் கியூபா மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை அடக்க புது ப்ளான்! ஜப்பானோடு கைக்கோர்த்த அமெரிக்கா! - என்ன டீலிங் தெரியுமா?

பட்டப்பகலில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை.. லவ் ஜிகாத் விவகாரத்தால் நடந்த விபரீதமா?

மத்திய அரசை விமர்சித்து கைத்தட்டல் வாங்கலாம்! ஓட்டு வாங்க முடியாது! - முதல்வருக்கு எல்.முருகன் பதில்!

இந்தியாவின் ஐடி மாநிலம் ஆகிறதா கேரளா? பினராயி விஜயனின் பிரமாண்ட இலக்கு..!

டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி.. மிகப்பெரிய மோசடி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments