Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சர்ஜரி: ஆச்சரியமான ஆதாரங்கள்

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (18:48 IST)
சர்ஜரி என்பது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சர்ஜரி என்ற வார்த்தை கூட இருந்திருக்காது என்றுதான் நினைத்திருபோம். ஆனால் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பசுமாடு ஒன்றுக்கு கிமு 3000ஆம் ஆண்டில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
 
பிரெஞ்ச் நாட்டின் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு சமீபத்தில் ஒரு பசுவின் மண்டை ஓடு கிடைத்தது. இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தபோது அதன் தலையில் பிஸ்கட் அளவிற்கு ஒரு ஓட்டை இருந்தது. இது சர்ஜரி செய்ததற்கான அடையாளமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனிதனின் மண்டை ஓட்டிலும் இதே அளவில் ஓட்டை இருந்தது என்பதால் அந்த காலத்தில் பசுவுக்கும் மனிதனுக்கு ஒரே முறையில் சர்ஜரி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments