Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளகாதலனுக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பிய பெண் மீது வழக்கு

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (17:21 IST)
துபாயில் வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு, அந்த நபருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதாக திருமணமான பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
துபாயில் உள்ள காமரோஸ் தீவைச் சேர்ந்த திருமணமாகாத வாலிபர் 28 ஒருவருக்கும், திருமணமான பெண்ணிற்கும் 29, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி கூடத்தில் வைத்து அறிமுகமாகியுள்ளனர். தனது குழந்தையை அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு கொண்டு வந்து விடும் போது அப்பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளாடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

சில நாட்களுக்கு பின், அந்தப் பெண்ணிடம் ஒரு செல்போனைக் கொடுத்து இதிலிருந்து தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட அந்த பெண்ணும் அவர் கொடுத்த செல்போனை வைத்து வாலிபரை தொடர்பு கொண்டு வந்தார்.

பின்னர், இருவரும் அந்த பெண்ணின் வீட்டில் வைத்து 3 முறை உடல் உறவு கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் இடையே பிரச்சனைகள் தொடங்க ஆரம்பித்தன. பின்னர், இருவருக்கு இடையே பல நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
 
உனது கணவரை விட்டுப் பிரிந்து வா. நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வாலிபர் வலியுறுத்தி வந்துள்ளார், ஆனால் முடியாது என்று கூறி அவருடன் தொடர்பை துண்டித்து விட்டார். இந்நிலையில், இருவரும் நெருக்கமாக பழகி வந்தபோது அப்பெண் அந்த நபருக்கு நிர்வாணப் புகைப்படங்கள் பலவற்றை கீக் எனப்படும் சமூக வலைதளம் மூலமாக அனுப்பியிருந்தார். அதை உனது கணவரிடம் காட்டி விடுவேன் என்று வாலிபர் மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
 
இதையடுத்து, அந்த பெண் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தன்னை மிரட்டியதாக கூறி வாலிபர் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் மீது திருமணம் செய்யாமல் இன்னொரு ஆணுடன் உடல் உறவு வைத்துக் கொண்டது, நிர்வாணப் படங்களை அந்த வாலிபருக்கு அனுப்பியது ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல், அந்த பெண்ணை தவறு செய்யத் தூண்டிய குற்றத்திற்கும் அந்த வாலிபர் மீது ஒரு பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments