Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.எஸ் தீவிரவாதிகளை இப்படியும் எச்சரிக்கலாம்

ஐ.எஸ் தீவிரவாதிகளை  இப்படியும் எச்சரிக்கலாம்
, புதன், 7 அக்டோபர் 2015 (08:00 IST)
சிரியாவில் அட்டூழியத்தை நாள்தோறும் அரங்கேற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை விதமாக சிரிய அரசு ஹெலிகாப்டர் மூலம் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தது.


 
 
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சர்வதேச நாடுகளின் உதவியுடன் செயல்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பைகளில் நிரப்பப்பட்ட பல ஆயிரம் பிரசுரங்கள் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த தைபிஷே பகுதியில்  வான்வளியாக வீசப்பட்டன.
 
தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு சிரியா அனுமதியளிக்கப்பட்டிருப்பதால், தீவிரவாதத்தை உடனடியாகக் கைவிடுமாறும், அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறும் அந்த பிரசுரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil