பாலைவனத்தில் பனிப்புயல் – மெக்ஸிகோவில் ஆச்சர்யம்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (19:12 IST)
மெக்ஸிகோவில் வெயில் தகிக்கும் ஊரில் பனிப்புயல் அடித்திருப்பது அங்குள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெக்ஸிகோவில் உள்ள சிறுநகரம் குவாதாலஜாரா. மெக்ஸிகோ தேசமே அதிகமான வெயில் அடிக்கும், வறட்சியான தேசம்தான். இந்நிலையில் பனிப்புயல் ஒன்று அடித்ததால் அந்த நகரத்தின் சில பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு பனி நிறைந்துள்ளது.

புயலில் சிக்கிய இலை தழைகள் அந்த பனியோடு உறைந்து காணப்படுகின்றன. கார்கள், பாதைகள் அனைத்திலும் பனி நிறைந்து காணப்படுகிறது. இந்த மாதிரியான பனிப்பகுதியை படங்களில் மட்டுமே பார்த்த குழந்தைகள் அதில் இறங்கி விளையாடுவது, பொம்மைகள் செய்வதுமாக இருக்கிறார்கள். பாதைகளில் உள்ள பனிகளை இயந்திரங்கள் கொண்டு அகற்றி வருகின்றனர். இந்த புயலில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து வானிலை அறிஞர்கள் “மிகவும் அபூர்வமாக இது போன்ற வானிலை மாற்றங்கள் நடப்பது உண்டு. புயலில் தண்ணீர் குளிர்ந்து பனியாகியிருக்கிறது. அதிகமான பாரத்தால் மெக்ஸிகோவில் சில பகுதிகளில் இந்த பனிகள் விழுந்திருக்கின்றன” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments