Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டார்! இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி..!

Siva
புதன், 31 ஜூலை 2024 (10:10 IST)
ஈரான் நாட்டின் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் என்பவர், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் அவரது வீட்டை குறிவைத்து இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரை நிறுத்த இந்தியா உள்பட பல நாடுகள் முயற்சித்தும் தொடர்ச்சியாக போர் நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை இந்த போரில் 39 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை  இஸ்ரேல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் என்பவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரான் நாட்டின் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இஸ்மாயில் வந்ததாகவும் அப்போது அவர் தங்கியிருந்த வீட்டை நோக்கி குறி பார்த்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல் இஸ்மாயில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments