Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்.. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:29 IST)
வயதான இரண்டு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாகவும், விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
ஏற்கெனவே 2 அமெரிக்க பெண்களை விடுத்த ஹமாஸ், தற்போது இரண்டு வயதான இஸ்ரேலிய பெண்களை விடுவித்துள்ளது. எகிப்து  மற்றும் கத்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் அடுத்தடுத்து பணயக்கைதிகள் விடுவிக்கபட்டு வருகின்றனர். 
 
 இருப்பினும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
பேச்சு வார்த்தையின் அடிப்படையில், மனிதாபமான அடிப்படையில் தான் பெண் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் போரில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை போல் செயல்படாதீர்கள்..! NDA எம்பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..!!

மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி..! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி.!!

தலைமறைவு குற்றவாளி..! விஜய் மல்லையாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிபிஐ நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments