Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை சுட்டுக்கொன்ற போலீஸார்

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (12:30 IST)
அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர் ஒருவர் கையில் கத்தி மற்றும் துப்பாக்கியுடன் நின்றுள்ளார். அந்த பகுதியில் இருந்தவர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து பொலீஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த வாலிபரிடம் துப்பாகி மற்றும் கத்தியை கையில் இருந்து கீழே போட்டுவிட்டு சரணடையும்படி கூறியுள்ளனர்.
 
ஆனால் அந்த வாலிபர் காவல்துறையினருக்கு கூறியதை கேட்கவில்லை. அதற்கு மாறாக அவர் என்னை சுடுங்கள், என்னை சுடுங்கள் என்று சத்தம்போட்டு கொண்டு காவல்துறையினரை நோக்கி முன்னேறி சென்றுள்ளார். இதனால் காவல்துறையினர் வேறுவழியின்றி அந்த வாலிபரை துபாக்கியால் சுட்டனர். 
 
இதில் படுகாயம் அடைந்த வாலிபரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததார். மேலும் விசாரணையில் இறந்த வாலிபர் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments