Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸாவில் பிறக்கும் முன்பே தாயை இழந்த குழந்தை

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (16:52 IST)
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 23 வயது பெண்ணின் கருவில் இருந்து 8 மாத குழந்தை காப்பாற்றப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.
காஸாவின் தியர் அல்-பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஷைமா, இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27 ஆம் தேதி இவரது வீட்டின் மீது இஸ்ரேல் வீசிய ஏவுகணையில் பலியான இவரின் கருவில் இருந்த குழந்தையை அசைவதை உணர்ந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர்.
 
தாய் உயிரிழந்து ஒரு மணி நேரம் கழித்து கருவில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. 
 
தற்போது இன்குபேட்டரில் இருக்கும் அக்குழந்தை நலமாக இருப்பதாகவும், இன்னும் 3 வாரங்கள் அக்குழந்தை மருத்துவமனையில் இருக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

Show comments